லல்லியின் பெயர்
"அம்மா..." "என்னடா?" "வேண்டாம், உனக்கு பதில் தெரியாது. அப்பா..." "என்னடி இப்படி சொல்லிட்டே!" அம்மா அவளைப் பார்த்து முறைத்ததில் பொய் பயத்துடன் அப்பாவை கட்டிண்டாள் லல்லி. அப்பா அவள் தலையை தட்டினார். "அம்மாவை எது வேணும்னாலும் கேட்கலாம். அவங்களுக்கு எல்லாம் தெரியும்." அம்மா அவளின் ஆசைக் கணவரைப் பார்த்து வெறுப்புடன் சிரித்தாள். "எல்லாம் தெரியாது. ஆனால் உன் கேள்வியை என்கிட்ட கேட்டுத்தான் பாரேன்?" லல்லி அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்திருந்தவனை உற்று பார்த்தாள். வெள்ளையாக, தலை முடியும் தோல் நிறமும் சேர்ந்து கொள்ள, ஒல்லியாக, நீட்ட மான கால்களை கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டில் அடக்கி, இளமஞ்சள் முடிக்கு நேர் எதிராக அலங்கரித்த கருப்புக் கண்ணாடியும் தலையுமாக, மிகவும் தீவிரமாக ஃபோனை சாய்த்து வைத்து இரண்டு கட்டை விரல்களாலும் நோண்டிக் கொண்டிருந்தான். "அவன் யாரும்மா?" அம்மா முழித்ததை அப்பா பார்த்து வாயைப் பொத்திக்கொண்டார். "சொல்லேன் மா. குழந்தை கேக்கறால்லை?" "எனக்கு எப்படி தெரியும், அந்த வெள்ளைக்காரப் பையன் யாருன்னு?" சுற...