முப்பெரும் தேவர்
வியாழக்கிழமை, காலை நான்கு முப்பது மணிக்கு திருவொற்றியூர் கடற்கரை அருகினில் இருந்த பட்டினத்தார் ஆலயத்திற்கு எதிரில் இருந்த பட்டினத்தார் கோவில் தெரு சாந்தமாக இருந்தது. ஆறு, ஏழு மணிக்கு மேல்தான் எல்லோரும் விழித்து, குளித்து, தெருவோர கடையில் ஒரு பால் பாக்கெட் வாங்கி, அவசரமாக காஃபியோ பூஸ்ட்டோ போட்டு குடித்துவிட்டு ஆஃபிசுக்கும் ஸ்கூலிற்கும் கிளம்புவார்கள். அந்த தெருவில் ஒருவன், அவனுடன் சேர்ந்து மற்ற இருவரும் வேண்டா வெறுப்பாக எழுந்துகொண்டார்கள். "பத்ரிஈஈ! தூக்கம் வருது டா!" தலை வாரிக் கொண்டே, கண்ணாடி வழியாக பதில் அளித்தான் பத்ரி. "தூங்கு. உன்னை யாரு எழுந்துக்க சொன்னாங்க இப்ப?" "நீ லைட்டை ஆன் பண்ணிண்டிருக்கியே!" பைரவன் கண்களை இறுக்கி மூடிய படி எழுந்தான். "ச்ச, இப்ப நைட் டைம் வறைக்கும் தூக்கம் வராது." பத்ரி சிரித்து அறையை விட்டு வெளியேறினான். பைரவன் தன் பக்கத்தில் மூஞ்சியை மூடி படுத்திருந்த பாரதியை பார்த்தான். "இவனுக்கு மட்டும் என்ன சுகம், எழுந்திரு டா!" போர்வையை பிடுங்கிப் போட்டான். பாரதியின் இளைய முகம் வெளி வந்தது. லைட்டின் வெளிச்சத்தில் அ...