Posts

அணுவின் ஆள்

தேர்ந்தெடுத்தல் மைலாப்பூர் மாதவப்பெருமாள் கோவில் தெருவில் வாழ்ந்த சடகோபாச்சாரியின் மகன் ராஜகோபால் அலியாஸ் 'ராஜு'வை காலேஜ்ஜில் சந்தித்திருக்கக்கூடாது... அவனுடன் பேசியிருக்கக்கூடாது... அவனிடம் ஸ்பேர் பென்சில் வாங்கியிருக்கக்கூடாது. இப்பொழுது பாருங்கள்? அந்த பென்சிலை வைத்துத்தான் மீண்டும் மீண்டும் நோட்டு புத்தகங்களில் இயல்பியல் சமன்பாடுகளுக்கு அருகில் ' அனகா ராஜகோபாலன்' என்று வித விதமான கையெழுத்து பயிற்சி செய்துவிட்டேன். ஒரு எக்ஸாம் பேப்பரின் கவர் ஷீட்டில் கூட அதே பென்சிலை வைத்து என் தந்தையின் அழகான பெயரான ராமசந்திரனுக்கு பதிலாக என் மனதில் அவ்வளவு இலவசமாக குடியிருந்தவனின் பெயரை எழுதிவிட்டேன். நல்ல வேலை, என் வளைவு எழுத்து பழக்கத்தினால் முதல் எழுத்தான 'ஆர்' தெரிந்ததே தவிர, வேறு எதுவும் புரியவில்லை. ஆமாம், இதில் என்ன அவ்வளவு பெரிய சிக்கல் என்று கேட்காதீர்கள். பேப்பரை திறுத்தியவர் ராஜுவின் தந்தை இயல்பியல் பிரபஸர் சடகோபாச்சாரி. ராஜுவின் அண்ணன் பள்ளிக்கூடத்தில் கண் முன்னால் எண்களும் எழுத்துகளும் பறக்குகிறது என்று சொல்லி அழுத பொழுது அவனின் டிஸ்லெக்சியா மீது கோபம். இப்பொ...

ஜாக்கிரதை!

பார்துவின் நிம்மதியான நான்கு வருட திருமண வாழ்வில் மிகவும் கோரமான ஒரு திருப்பம் நேர்ந்து விட்டது . அவனுக்கு வாழ்க்கையை வாழ இஷ்டமே இல்லாமல்  ஆக்கி விட்டது . 'போலீசாக இருந்தது போதும்' என்ற திடீர் வைராக்கிய உணர்வோடு ராஜா ரவி வர்மாவை போல் சித்திரம்  செய்யவேண்டும் என்ற  திடீர் ஆர்வம்  கொண்டு   விஜயநகரத்தில் ஓரளவுக்கு வசதியான இரண்டு மாடி வீட்டிற்கு ஏழு மாதங்கள் வாடகை கட்ட இயலாமல் துளைத்து, இரண்டு வாரங்களுக்கு முன் பார்துவின்   தந்தையின் ராசியான விசாகபட்டணம் வீட்டின் வாசலில் வந்து நின்றிருந்தார்கள் பார்துவின் அக்காவும் மாமாவும்.  இவர்களில்  இந்த விஷமம் எல்லாம் செய்தது மிஸ்டர் பாவா. பார்துவின் அக்கா பத்து என்றவள், சற்று பாவம்தான், ஆனால் காட்டிக்கொடுக்கமாட்டாள் . போலீஸ் ஸ்டேஷனில் போரென்சிக் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை செய்து எப்படியோ குடும்பத்தை நடத்துகிறாள். இந்த திருப்பம் ஏன் பார்துவிற்கு அவ்வளவு கோரமாக இருந்ததற்கு விளக்கம், கீழே காணப்படும் நள்ளிரவு வசனத்தினால் தெரியப்படும் . காட்சி நடக்கும் இடம்; பார்துவின் படுக்கை அறை. பேசும் பாத்திரங்கள்; பார்து, பார்துவின்...

லல்லியின் பெயர்

"அம்மா..." "என்னடா?" "வேண்டாம், உனக்கு பதில் தெரியாது. அப்பா..." "என்னடி இப்படி சொல்லிட்டே!" அம்மா அவளைப் பார்த்து முறைத்ததில் பொய் பயத்துடன் அப்பாவை கட்டிண்டாள் லல்லி. அப்பா அவள் தலையை தட்டினார். "அம்மாவை எது வேணும்னாலும் கேட்கலாம். அவங்களுக்கு எல்லாம் தெரியும்." அம்மா அவளின் ஆசைக் கணவரைப் பார்த்து வெறுப்புடன் சிரித்தாள். "எல்லாம் தெரியாது. ஆனால் உன் கேள்வியை என்கிட்ட கேட்டுத்தான் பாரேன்?" லல்லி அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்திருந்தவனை உற்று பார்த்தாள். வெள்ளையாக, தலை முடியும் தோல் நிறமும் சேர்ந்து கொள்ள, ஒல்லியாக, நீட்ட மான கால்களை கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டில் அடக்கி, இளமஞ்சள் முடிக்கு நேர் எதிராக அலங்கரித்த கருப்புக் கண்ணாடியும் தலையுமாக, மிகவும் தீவிரமாக ஃபோனை சாய்த்து வைத்து இரண்டு கட்டை விரல்களாலும் நோண்டிக் கொண்டிருந்தான்.  "அவன் யாரும்மா?" அம்மா முழித்ததை அப்பா பார்த்து வாயைப் பொத்திக்கொண்டார். "சொல்லேன் மா. குழந்தை கேக்கறால்லை?" "எனக்கு எப்படி தெரியும், அந்த வெள்ளைக்காரப் பையன் யாருன்னு?" சுற...

கிருஷ்ணவேணிக்கோர் காதல் கதை

கிருஷ்ண நிவாசம் அடையாறு, அந்த இரவு நேரத்தின் நிலவு, "சீயர்ஸ்!" என்ற இரண்டு குவலைகளின் அழகான முத்தம், அதனின் உள்ள பீயரும் ஐஸ் கட்டிகளும் ஒன்றை ஒன்று அடித்து, கிளாஸில் சரிந்து விழுவதின் சத்தம் மாடியில் தன் படுக்கையில் படுத்திருந்த கிருஷ்ணவேணிக்கு அனாவசியமாக கேட்டது. திரும்பி தன் பக்கத்தில் படுத்திருந்த அம்மாவை பார்த்தாள். ஒரு ஆங்கில புத்தகமும் கையுமாக இருந்தாள். அம்மா எப்பொழுதும் படிக்கும் பொழுது வைத்திருக்கும் உம்மூஞ்சி இப்பொழுதும், அவள் தலையணை பக்கத்தில் இருந்த சிறிய விலக்கினால் தெரிந்தது. கிருஷ்ணவேணி சிரித்து அம்மாவின் நீட்டியிருந்த கீழ் உதடை பிடித்துக்கொண்டாள். "என்னங்க, இவ்வளவு உறக்கா குடிக்காதீங்களேன்? ராத்திரி நேரம் அதுவுமா!" என்று அம்மாவின் வாயை பிதுக்கி அசைத்து அவள் பேசினாள். புருவங்களை சேர்த்துக் கொண்டு அம்மா அவளின் கையை தள்ளினாள். "என்னடி செய்யறே, தூங்காம?" "அப்பா குடிச்சிண்டு இருக்கார்." "அதுக்கென்ன இப்போ?" கிருஷ்ணவேணி திரும்பி தொப்பையில் படுத்துக்கொண்டாள். நகங்களை மிகக் கொடுமையுடன் பிசைத்தாள். "அந்த வெள்ளைக்காரனோட போய்....